சூன் 18
நாள்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 18 (June 18) கிரிகோரியன் ஆண்டின் 169 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 170 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 196 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 618 – லீ யுவான் சீனாவில் பேரரசனாக முடி சூடினான். அவனது தாங் வம்சம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்கு சீனாவை ஆண்டது.
- 1429 – பிரெஞ்சுப் படையினர் ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பாட்டேய் சமரில் ஆங்கிலேயப் படையினரத் தோற்கடித்தனர். நூறாண்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
- 1633 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக எடின்பரோவில் முடிசூடினார்.
- 1767 – ஆங்கிலேயக் கடற்படைத் தலைவர் சாமுவேல் வால்லிசு தாகித்தியை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிலடெல்பியாவை கைவிட்டனர்.
- 1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் காங்கிரசு பிரித்தானியா, கனடா, அயர்லாந்து மீது போரை அறிவித்தது.
- 1815 – நெப்போலியப் போர்கள்: வாட்டர்லூ சமரில் நெப்போலியன் பொனபார்ட் வெல்லிங்டன் பிரபுவினால் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து நெப்போலியன் பிரான்சின் அரசாட்சியை இரண்டாம் தடவையாகவும், இறுதியாகவும் இழந்தான்.
- 1830 – பிரான்சு அல்சீரியாவை ஊடுருவியது.
- 1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய முடிவுகளுக்கு ஒப்பான ஆய்வு அறிக்கைகளை ஆல்ஃவிரடு அரசல் வாலேசுவிடம் இருந்து பெற்றார். இதனை அடுத்து டார்வின் தனது ஆய்வு அறிக்கைகளை வெளியிட வேண்டி வந்தது.
- 1869 – இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது.
- 1887 – வேற்று நாடு ஒன்று தமது நாடுகளுடன் போரில் ஈடுபட்டால் இரு நாடுகளும் நடுநிலை வகிப்பதென்ற ஒப்பந்தத்தில் செருமனியும், உருசியாவும் கையெழுத்திட்டன.
- 1900 – சீனாவின் பேரரசி டோவாகர் சிக்சி வெளிநாட்டுத் தூதுவர், அவர்களது குடும்பத்தினர் உட்பட சீனாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவரும் கொல்லப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.
- 1908 – சப்பானியர்கள் 781 பேர் பிரேசிலின் சான்டோசு கரையை அடைந்ததுடன் சப்பானிக் குடியேற்றம் அங்கு ஆரம்பித்தது.
- 1908 – பிலிப்பைன்சு பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
- 1928 – வானோடி அமேலியா ஏர்ஃகாட் அத்திலாந்திக்குப் பெருங்கடலை விமானத்தில் கடந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
- 1946 – சமூகவுடைமைவாதி ராம் மனோகர் லோகியா போத்துக்கீசருக்கு எதிராக கோவாவில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
- 1948 – கொலொம்பியா ரெக்கார்ட்சு நிறுவனம் நீண்ட நேரம் ஒலிக்கும் இசைத்தட்டை நியூயார்க்கில் வெளியிட்டது.
- 1948 - மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
- 1953 – 1952 எகிப்தியப் புரட்சி முடிவுக்கு வந்தது. முகமது அலி வம்சம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு எகிப்து குடியரசாக அறிவிக்கப்பட்டது.
- 1953 – ஐக்கிய அமெரிக்க வான்படையைச் சேர்ந்த சி-24 விமானம் சப்பான், தச்சிக்காவா என்ற இடத்தில் மோதி வெடித்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
- 1954 – அடையாறு புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டது.
- 1965 – வியட்நாம் போர்: அமெரிக்கா பி-52 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தெற்கு வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணி கரந்தடி வீரகளைத் தாக்கியது.
- 1972 – பிரித்தானிய பயணிகள் விமானம் ஒன்று இலண்டன் ஈத்ரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரண்டு நிமிடங்களில் தரையில் மோதி வெடித்ததில் 118 பேர் கொல்லப்பட்டனர்.
- 1981 - அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநில நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழத்தை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1981 – கரவு தொழினுட்பத்தைக் கொண்டு தயாரான முதலாவது வானூர்தி லொக்கீட் எப்-117 நைட்கோக் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
- 1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சாலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.
- 1983 – பகாய் சமயத்தைப் பின்பற்றியமைக்காக 10 பகாய் பெண்கள் ஈரான் சீராசு நகரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1994 – வட அயர்லாந்தில் இரவு விடுதி ஒன்றில் 1994 கால்பந்து உலகக்கோப்பை போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மீது அல்ஸ்டர் படையினர் சுட்டதில் ஆறு கத்தோலிக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஐந்து பேர் காயமடைந்தனர்.
- 2006 – கசக்ஸ்தானின் முதலாவது செயற்கைக்கோள், காஸ்சாட் ஏவப்பட்டது.
பிறப்புகள்
- 1882 – கியார்கி திமித்ரோவ், பல்கேரியாவின் 32வது பிரதமர் (இ. 1949)
- 1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி (இ. 1981)
- 1920 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1980)
- 1924 – கோபுலு, தமிழக ஓவியர் (இ. 2015)
- 1942 – தாபோ உம்பெக்கி, தென்னாப்பிரிக்காவின் 23வது அரசுத்தலைவர்
- 1949 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 2010)
- 1959 – கெயில் வாசு ஒக்சலேட், கனடிய நிதி எழுத்தாளர், ஊடகவியலாளர்
- 1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி (இ. 2008)
- 1965 – த. சதீஷ்குமார், தமிழக எழுத்தாளர்.
- 1967 – அரவிந்த்சாமி, நடிகர், தொழிலதிபர்
- 1986 – ரிச்சர்ட் மாட்டேன், இசுக்கொட்டிய நடிகர்
இறப்புகள்
- 1858 – இராணி இலட்சுமிபாய் (பி. 1828)
- 1928 – ருவால் அமுன்சென், நோர்வே நாடுகாண் பயணி (பி. 1872)
- 1936 – மாக்சிம் கார்கி, உருசிய எழுத்தாளர் (பி. 1868)
- 1980 – சின்ன அண்ணாமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1920)
- 2005 – வசீர் அலி, இந்தியத் துடுப்பாளர் (பி. 1914)
- 2009 – அலி அக்பர் கான், இந்துத்தானி இசைக் கலைஞர் (பி. 1922)
- 2010 – ஜோசே சரமாகூ, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற போர்த்துக்கீச எழுத்தாளர் (பி. 1922)
- 2011 – பிரெடிரிக் சிலுபா, சாம்பியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1943)
சிறப்பு நாள்
- தேசிய நாள் (சீசெல்சு)