பாசிர் சாலாக்
பாசிர் சாலாக் (ஆங்கிலம்: Pasir Salak; மலாய்: Pasir Salak; சீனம்:
இந்த நகரம் பேராக் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிம் ஆகும். பேராக் ஆற்றின் மறுகரையில் கம்போங் காஜா நகரம் உள்ளது. பாசீர் சாலாக்கின் தென்பகுதியில் செபராங் பேராக் எனும் அரிசிக் களஞ்சியம் உள்ளது.
ஜேம்சு பர்ச்
[தொகு]பேராக், பாசிர் சாலாக் (Pasir Salak) எனும் இடத்தில் பிரித்தானிய ஆணையர் ஜேம்ஸ் பர்ச் (James Wheeler Woodford Birch); மகாராஜா லேலா (Maharaja Lela) என்பவரால் 1875 நவம்பர் மாதம் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். ஜேம்ஸ் பர்ச் பேராக் மாநிலத்தின் முதல் பிரித்தானிய முதல்வராக அனுப்பப்பட்டவர். அதன் பின்னர் பேராக் போர் நடந்தது.[1]
உள்ளூர் மலாய்த் தலைவர்கள் மகாராஜா லேலா மற்றும் செபுண்டம் ஆகியோரின் சதியின் விளைவால் அந்த நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிரித்தானிய இராணுவத் தலையீட்டின் மூலம் பிரச்சினை தீர்வு காணப்பட்டது. இந்த நிகழ்வு மலாயா மக்களிடையே பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது.[2]
குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]- ஜேம்சு பர்ச் நினைவுச்சின்னம்
- பாசிர் சாலாக் மசூதி
- கூத்தாய் பாரம்பரிய வீடு
- செபுண்டம் நினைவகம்
- டத்தோ மகாராஜா லேலா நினைவிடம்
- ஜேம்ஸ் பர்ச் கொலை நடந்த இடம்
- படகு துறை
- பாசிர் சாலாக் வரலாற்று சுரங்கப்பாதை
- பேராக் மந்திரி பெசார் கலைக்கூடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pasir Salak Historical Complex". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ "Kompleks Sejarah Pasir Salak". பார்க்கப்பட்ட நாள் 12 January 2024.