(Translated by https://www.hiragana.jp/)
சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு.. சென்னையில் பரபரப்பு! – News18 தமிழ்
விளம்பரம்

உங்கள் நகரத்தைத் தேர்ந்தெடுக்கவும்

நிலை

தமிழ் செய்திகள் / சென்னை / சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு.. சென்னையில் பரபரப்பு!

சாலையில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு.. சென்னையில் பரபரப்பு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

Chennai acid attack | குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்த ராஜா என்ற நபர் தான் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • 1-MIN READ News18 Tamil Chennai,Tamil Nadu
  • Last Updated :

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் சாலையோரமாக சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த நபர் பெண் ஒருவர் மீது ஆசிட் பாட்டிலை வீசி விட்டு தப்பியோடினார். ஆசிட் பாட்டில் உடைந்து அதில் இருந்த திராவகம் தெறித்ததில், 2 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட சிலர் காயமடைந்தனர். தோலில் பாதிப்பு ஏற்பட்ட ஐந்து வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விளம்பரம்

குற்ற வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்று விட்டு ஜாமினில் வெளியே வந்த ராஜா என்ற நபர் தான் ஆசிட் வீச்சு சம்பவத்துக்கு காரணம் என போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாலையில் படுத்திருந்த பெண் ஒருவருக்கும் ராஜாவுக்கும் ஏற்கெனவே முன்பகை இருந்ததாகவும் அதனால்தான் இந்த ஆசிட் தாக்குதல் சம்பவம் நடந்தாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சென்னையில் பேருந்து வழிதடங்களில் இனி குழப்பம் வேண்டாம் - அரசு எடுத்த புது ரூட்

இந்நிலையில் அந்த பகுதி முழுவதும் ஆசிட் நெடி வீசி வருவதுடன் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் குறித்து கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்
.
  • First Published :
விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்