ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் குவாலிஃபையர் 1 போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் வேகத்தில் போல்டாகி வெளியேறினார்.
அபிஷேக் சர்மா 3 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுக்க ஐதராபாத் அணி 5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
இதையடுத்து இணைந்த ராகுல் திரிபாதி – ஹெய்ன்ரிச் கிளாசன் இணை அதிரடியாக ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டது. கிளாசன் 32 ரன்னில் ஆட்டமிழக்க இந்த இணை 5 ஆவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
ராகுல் திரிபாதி 55 ரன்னும், அப்துல் சமத் 16 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவர்களில் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 சிக்சருடன் 30 ரன்கள் சேர்க்க, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 159 ரன்கள் எடுத்துள்ளது.
- Follow us onFollow us on google news